இஙகிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த மாணவிக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு
சிங்கப்பூரில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் B-117 பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்: பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது என்று கூறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வேறு ஒரு வடிவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாற்றமடைந்த வைரசை விட இது வீரியமானது என்றும் வேகமாக பரவக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் உருமாறியுள்ள கொரோனா தொற்று அங்கிருந்து பிரிட்டன் வந்தவர்களுக்கு பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 17வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனினும் அது சமூக பரவலாக பரவ வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.