சிங்கப்பூரில் விஸ்வரூபமெடுத்த கொரோனா- ஒரேநாளில் 287 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 287 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 200க்கும் அதிகமானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கக் கூடிய இடங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மொத்தம் 7 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகினர். 1910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமையன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த பாதிப்பு பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இடங்களில்தான் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வெளிநாட்டு ஊழியர்கள் ஒரே இடங்களில் தங்கும் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.