சிங்கப்பூரில் திடீரென மேலும் 481 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மேலும் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு இருந்த போதும் அது கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியது.
தற்போது ஒரே நாளில் மேலும் 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 50,000-த்தை தாண்டியுள்ளது. சிங்கப்பூரில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,369 ஆக உயர்ந்துள்ளது.
ப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி
சிங்கப்பூரில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே கொரோனாவால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.