சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கப்பூரில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு- கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்றும் கொரோனாவுக்கு 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிங்கப்பூரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் எச்சரிக்கையுடன் தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் சீனா, இந்தியாவைத் தொடர்ந்து சிங்கப்பூரில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகம். சிங்கப்பூரில் இன்றும் கூட 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Singapore reports 657 new Coronavirus cases

இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனிடையே சிங்கப்பூரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அந்நாடடு துணை பிரதமர் ஹெங் சுவீ கூறியுள்ளார்.

ஒரு வேளை நான் இறந்திருந்தால்.. பக்காவாக திட்டமிட்ட அதிகாரிகள்.. போரிஸ் ஜான்சன் பரபரப்பு பேட்டிஒரு வேளை நான் இறந்திருந்தால்.. பக்காவாக திட்டமிட்ட அதிகாரிகள்.. போரிஸ் ஜான்சன் பரபரப்பு பேட்டி

இது தொடர்பாக அவர் கூறுகையில், சிங்கப்பூர் இன்னமும் ஆபத்தான நிலையை கடந்துவிடவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் முதல் கட்டமாக உயிர் மருத்துவம், எரிபொருள், உற்பத்தி துறைகள் செயல்படும் என்று அந்நாட்டு வர்த்தகத துறை அமைச்சர் சான் சின் சுங் கூறியுள்ளார்.

English summary
Singapore today reported 657 new cases of Coronavirus on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X