சிங்கப்பூர்: இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரம் நீட்டிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று மேலும் 932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 17,101 .
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள். சிங்கப்பூரில் 85% கொரோனா பாதிப்பு வெளிநாட்டு தொழிலாளர்களால் ஏற்பட்டிருக்கிறது.
இந்த தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களில்தான் கொரோனா மிக அதிகமாக பரவி வருவதாக சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்திருக்கிறது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,993 பேருக்கு கொரோனா பாதிப்பு- மத்திய அரசு
அதாவது S pass வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அனுமதி அட்டைதாரர்கள் ஆகியோர் மே 4-ந் தேதி வரை வீடுகளிலேயே இருக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு மே 18-ந் தேதி அதாவது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.