சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக் கொலை.. கத்தியுடன் சிக்கிய கொலையாளி

Google Oneindia Tamil News

சிவகங்கை: அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நேரு பஜார் வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (40). இவர் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இன்று தமிழ்ச்செல்வன் மருத்துவமனையில் பணியில் இருந்த போது, உள்ளே புகுந்த ஒக்கூரை சேர்ந்த அருண் குமார் என்பவர் தமிழ்ச்செல்வனை திடீரென, சரமாரியாகக கத்தியால் குத்தியுள்ளார். இதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Employee murdered at Sivagangai government hospital

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர், அருண்குமாரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Day light murder happened in Sivagangai government hospital on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X