சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலும், தமிழகத்திலும் புது அரசு அமைய ஓட்டுபோட்டேன்.. நீங்களும் ஓட்டுபோடுங்க.. ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    P Chidambaram Casts Vote: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார்- வீடியோ

    சிவகங்கை: நாட்டிலும், தமிழகத்திலும் புதிய அரசுகள் அமைய வாக்களித்துள்ளதாகவும், மக்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு (வேலூர் தவிர) இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.

    i vote for new government in center and state so people should vote : p chidambaram

    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தமிழகம் முழுவதும வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சிவகங்கையில் கண்டனூர் பெத்தாள் ஆச்சிபள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணி அளவில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.

    'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு 'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "நாட்டிலும், தமிழகத்திலும் புதிய அரசுகள் அமைய வாக்களித்துள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜாதி மத சகிப்புத்தன்மை, ஜனநாயகம் வெல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.

    English summary
    congress ex minister p chidambaram says i vote for new government in center and state so people should vote
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X