சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டின் கதவை திறந்த திருமலாதேவி.. கணவனின் நிலை கண்டு பேரதிர்ச்சி.. போலீஸ்காரரின் விபரீத முடிவு

Google Oneindia Tamil News

சிவகங்கை: மானாமதுரையில் தன்னதானே கத்தியால் குத்தி கொண்டு ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்ட பிரபு (31). இவர் மதுரை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி திருமலா தேவி தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

manamadurai police suicide by Stabbing with a knife

நேற்று மாலை மணிகண்ட பிரபுவின் மனைவி திருமலா தேவி பள்ளியில் பணி முடிந்ததும் வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவர் மணிகண்ட பிரபு உள்ளே கத்தியால் நெஞ்சில் குத்தி கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தாராம். அதை பார்த்துவிட்டு வெளியே அலறி அடித்து கொண்டு வெளியே ஒடி வந்துள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து வீட்டுக்குள் பார்த்துள்ளனர். அங்கு இரத்த வெள்ளத்தில் மணிகண்ட பிரபு உயிரிழந்தது கிடந்துள்ளார். பின்னர் அவர்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்ட பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில், மணிகண்ட பிரபு, தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவரது மனைவி திருமலா தேவி போலீசாரிடம் தெரிவித்தார்.

மணிகண்டன் பிரவுவின் மனைவி திருமலா தேவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னதானே அவர் கத்தியால் குத்தி கொண்டது ஏன் என்பது குறித்தும், குடும்ப பிரச்னையா அல்லது அலுவலக பிரச்னை என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மானாமதுரையில் தன்னதானே கத்தியால் குத்தி கொண்டு ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

English summary
wife shocking after seeing husband suicide by Stabbing with a knife in manamadurai. suicide husband works at police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X