மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்.. காத்திருந்த அதிர்ச்சி.. மீட்டுத்தர தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
சிவகங்கை: மலேசியப் போதைப் பொருள் கும்பலிடம் விற்கப்பட்ட தனது மகனை மீட்டுத் தர கோரி அவரது தாய் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சிவகங்கை அருகே உள்ள முத்துபட்டிபுதூர்யை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகன் ஆனந்த் (20). இவர் கடந்த வருடம் மலேசியாவில் கோவில் வேலைக்குக் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மூலமாக ரூ.80 ஆயிரம் செலவு செய்து மலேசியாவிற்குச் சென்றுள்ளார்.
ஆனால் அங்குச் சென்ற ஆனந்த்திற்கு கோவில் வேலை வழங்காமல் அங்கு உள்ள போதைப் பொருள் கும்பலிடம் இளைஞர் விற்கப்பட்டுள்ளார். இதை இளைஞர் தனது குடும்பத்திற்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார். அதை அப்போதைய சிவகங்கை காவல் துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதனிடம் ஆனந்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மலேசியா வேலை.. ஏமாந்த தமிழர்கள்.. இந்திய தூதரக செயலால் கொதித்த சீமான்.. ஸ்டாலினுக்கு கோரிக்கை
அவர் தமிழ்நாடு காவல் துறைத் தலைவரிடம் புகார் செய்து அந்த இளைஞரை, மலேசியா காவல் துறையினர் மீட்டு அங்கு உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். தற்போது அந்த இளைஞரை மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அது மட்டும்யின்றி தனது மகனை மீட்டுத் தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மலேசியாவில் உள்ள தன்னுடைய மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அவர் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்ப்பவர்கள் கண்களைக் கண் கலங்க வைத்துள்ளது.