சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Google Oneindia Tamil News

சிவகங்கை: நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தமிழகம் முழுக்க பொங்கல் விழா மக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. எல்லா வருடமும் நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் பொங்கல் விழா கொண்டாடப்படும்.

இந்த வருடமும் அதேபோல் விழா நடைபெற்றது. அதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்

அரணையூரில் விழா

தமிழர் தேசியத் திருவிழா என்ற பெயரில் அரணையூரில் இந்த விழா நடந்தது. அதில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர் வைக்கப்பட்டு இருக்கும் விளையாட்டுத்திடலில் மாபெரும் கபடிப் போட்டி நடந்தது. இதை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கிவைத்தார்.

பாலச்சந்திரன் கொடி

பிரபாகரனின் மகன் மறைந்த, பாலச்சந்திரன் நினைவைப் போற்றும் கொடிமரத்தில் புலிக்கொடியேற்றி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விழாவைத் தொடங்கிவைத்தார்.

சிறப்பு

இளைஞர்களுக்கு இடையே நடந்த இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. பல இளைஞர்கள் ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டனர்.

பரிசுகள்

போட்டியின் முடிவில் சீமான் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விளையாட்டு வீரர்களுடன் அவர் உரையாடினார். இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

English summary
Naam Tamilar Party Celebrates Pongal in Sivagangai Aranaiyur with village people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X