தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஹேண்ட்சம் வெற்றியை பெறும்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
Recommended Video
காரைக்குடி: தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான காாத்தி சிதம்பரம் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தாய் நளினி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோருடன் கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். பின்னர் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் தங்களது கூட்டணி ஒரு ஹேண்ட்சமான வெற்றியை பெறும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதை பற்றிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், நாடு முழுவதிலுமே மக்கள் தெளிவான பார்வையுடன் உள்ளனர். வாக்களிப்பது அவர்களது உரிமை என்ற விழிப்புணர்வு நிறையவே ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்த வரை மத்தியில் ஒரு மதச்சார்பற்ற அரசு தான் அமைய வேண்டும் என்பதில் மக்கள் மிகத்தெளிவாக உள்ளனர் என்றார்.
Tamil Nadu: Nalini Chidambaram, Karti Chidambaram and his wife Srinidi Rangarajan casts their vote at a polling station in Karaikudi, Sivaganga. #LokSabhaElections2019 pic.twitter.com/2C5hLVUsPb
— ANI (@ANI) April 18, 2019