31 வயசு ஆண்ட்டி.. வாட்டிய தனிமை.. 13 வயசு பையனுக்கு 2 வரும் டார்ச்சர்.. சிவகங்கையில் இந்த அக்கிரமம்
13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த பெண் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை: பையனுக்கு வயசு 13... ஆண்ட்டிக்கு வயசு 31.. கடந்த 2 வருஷமாக சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் இந்த பெண்.. தற்போது போக்சோவில் கைதாகி ஜெயிலில் உள்ளார்!
திருப்புத்தூர் அருகே ஆவினிப்பட்டியை சேர்ந்தவர் தேவி.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 31 வயதாகிறது.. இவரது கணவர் இறந்துவிட்டார்.
தனிமையிலேயே சிக்கி தவித்து வந்த தேவி, அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வந்துள்ளார்.. இந்த விஷயம் அந்த சிறுவனின் அப்பாவுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், அதிர்ச்சி அடைந்த அவர், கீழச்சிவல்பட்டி போலீசில் புகார் தந்தார்.
13 வயசு பெண்ணுக்காக ஏங்கி தவித்த 55 வயசு தாத்தா.. கடைசியில் ஒரு கொலை.. டெல்லியில் பயங்கரம்!
மாமரம்
இந்த புகாரின்பேரில் போலீசாரும் சிறுவனை அழைத்து இதை பற்றி விசாரித்தனர். அப்போதுதான் மொத்த விஷயமும் வெளியே வந்தது.. 2 வருஷமாகவே தேவி இப்படி ஒரு தொல்லையை சிறுவனுக்கு தந்து வந்தாராம்.. ஒரு நாள் தன் வீட்டின் பக்கத்தில் இருந்த மாமரம் மீது சிறுவன் கல் எறிந்தானாம்.
தேவி
அந்த கல், தேவியின் பக்கத்து வீட்டில் இருந்த தங்கையின் வீட்டின் மீது விழுந்து கண்ணாடி ஜன்னல் உடைந்துள்ளது.. அப்போதுதான் முதன்முதலில் சிறுவனை சந்தித்துள்ளார் தேவி.. "கண்ணாடி உடைந்துவிட்டது.. 2 ஆயிரம் ரூபாய் தந்துட்டு போ" என்று சிறுவனை தேவி மிரட்டி உள்ளார்.
செக்ஸ் தொல்லை
இதற்கு பயந்துபோன சிறுவன், தன் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியால் பணத்தை திருடி கொண்டு தேவியிடம் தந்துள்ளான். அப்போதிருந்துதான், சிறுவனை மிரட்ட தொடங்கி உள்ளார் தேவி.. அந்த ஜன்னல் உடைந்ததுக்கு, அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவாராம்.. சிறுவனும் திருடி திருடி கொண்டு வந்து தருவானாம்.. இப்படியே செக்ஸ் விஷயத்துக்கும் சிறுவனை பயன்படுத்தி உள்ளார்.
அழுதான்
2 வருஷத்துக்கு முன்னாடி பாலியல் தொல்லை என்றால், சிறுவனுக்கு அப்போது வயது 11-வயசுதான் ஆகியிருக்கிறது.. அடிக்கடி வீட்டில் பணம் திருடு போய் கொண்டே இருக்கவும்தான், சந்தேகமடைந்து சிறுவனை பெற்றோர் மிரட்டி கேட்டு உள்ளனர்.. அப்போதுதான் எல்லாவற்றையும் சொல்லி அழுதிருக்கிறான்.. இதற்கு பிறகுதான் சிறுவனின் அப்பா போலீசுக்கு வந்திருக்கிறார்.. இப்போது தேவியை போக்சோவில் கைது செய்துள்ளனர்.. நிலக்கோட்டை பெண்கள் ஜெயிலிலும் தேவி அடைக்கப்பட்டுள்ளார்!