தமிழ் புத்தாண்டு முதல்... தமிழுக்கு கவுரவம்! பியூஸ் கோயல் முக்கிய அறிவிப்பு
சிவகங்கை: தமிழ் புத்தாண்டு நாள் முதல் ரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழி அச்சடிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக காரைக்குடி பகுதியில் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளரும், ரயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழ் மொழி மீதான பெருமை, ஆற்றல் நிச்சயம் பாதுகாக்கப்படும்; அம்பேத்கர் பிறந்த நாளன்று (ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு) ரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழி அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றார்,
இதெல்லாம் செஞ்சுடாதீங்கப்பா.. உரிமையோட சொல்றேன், புரிஞ்சுக்கங்க... தினகரன் வேண்டுகோள்
இந்த தேர்தலில் ஊழல் பணத்தை காங்கிரஸ் கட்சியினர் செலவு செய்வார்கள் என்றும், அதனை நாம் முறியடித்து வெற்றி பெற வேண்டும் என்றும் பியூஸ் கோயல் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மக்களவை தேர்தலில் அதிமுக நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு நேர்காணலில், விளக்கம் அளித்த பியூஸ் கோயல், நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக அதிமுகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.