"அபியும் நானும்".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்
டிக் டாக் இளம்பெண் வினிதா காப்பகத்தில் இருந்து மாயமாகி விட்டாராம்
Recommended Video
தேவக்கோட்டை: வாயை திறந்தாலே பொய் பொய்யா அவிழ்த்துவிட்ட டிக்டாக் வினிதா, இப்போது தங்க வைக்கப்பட்டிருந்த லேடீஸ் ஹாஸ்டலில் இருந்தே மாயமாகிவிட்டாராம்.
திருவிழாக்களில் டான்ஸ் ஆடும் பெண் தோழி அபியுடன் பழகக்கூடாது, அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ செய்யக்கூடாது என்று வினிதாவின் கணவர், தாயார் அட்வைஸ் செய்தனர்.
ஆனாலும் வீட்டிலிருந்து 20 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, திரும்பவும் அபியிடமே வந்து தந்து, அவருடனே ஓடிவிட்டார் வினிதா.
"இந்தாங்க.. விக் வெச்சுக்குங்க"... தலைமுடியை தானம் செய்த அபர்ணா.. எழுந்து நின்று பாராட்டும் கேரளா!
20 பவுன் நகை
இறுதியில் போலீசார் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், தேவக்கோட்டை ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். இதனால் கடந்த 2 தினங்களாக இவரிடம் மகளிர் போலீசார் ஸ்பெஷல் கேர் எடுத்தே விசாரித்தனர். அப்போதுதான், அபியுடன் ஓடியதையும், 20 சவரன் நகையை தந்ததையும், ஸ்டேஷன் வாசல் வரை வந்த தோழிகள் அபியும், சரண்யாவும், உள்ளே வராமல் அப்படியே திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறினர்.
தனிப்படை
இதையடுத்து போலீசார், அபி, சரண்யாவை செல்போனில் பேசி, தேவக்கோட்டைக்கு விசாரணைக்கு வரும்படி சொன்னார்கள். ஆனால் 2 பேருமே வரவில்லை. அதனால், அவர்களை கைது செய்து விசாரிக்க தனிப்படை போலீசார் திருவாரூர் மற்றும் கரூருக்கு விரைந்தனர்.
மறுப்பு
இதனிடையே, விசாரணை முடியும்வரை, வினிதாவை, தாய், அல்லது கணவனுடன் செல்லுமாறு போலீசார் சொன்னார்கள். ஆனால், இருவருடனும் போக வினிதா மறுத்துவிட்டார். இதனால், தற்சமயம், காரைக்குடியில் உள்ள மகளிர் ஹாஸ்டலில் தங்க வைத்தனர்.
ஹாஸ்டல்
ஆனால் அங்கிருந்து வினிதா எஸ்கேப் ஆகி உள்ளார். எங்கே போனார் என்றும் தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாஸ்டல் நிர்வாகம் சார்பில், இது சம்பந்தமாக வடக்கு ஸ்டேஷல் புகார் தரப்பட்டதையடுத்து, இப்போது வினிதாவை தேடும்பணி நடக்கிறது. இந்த 3 பெண்களையும் ஒன்றாக உட்கார வைத்து பேசி, விசாரணை நடத்தினால்தான் நிஜமான சமாச்சாரங்கள் தெரியவரும் என நம்பப்படுகிறது.