மெமோ வாங்க வச்சுட்டியே.. குழந்தையுடன் இருந்த பெண்ணை விரட்டி விரட்டி அடித்த கண்டக்டர்
பெண் பயணியை அரசு பேருந்து கண்டக்டர் ஒருவர் தாக்கி உள்ளார்.
Recommended Video
சிவகங்கை: "உன்னாலதான் எனக்கு மெமோ தந்துட்டாங்க" என்று சொல்லி சொல்லி லஷ்மி என்ற பெண் பயணியை அடித்து உதைத்துள்ளார் அரசு பஸ் கண்டக்டர் ஒருவர்!!
சிவகங்கை மாவட்டம், ராஜகுடியேந்தல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லஷ்மி. இவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் இளையான்குடி அரசு பஸ்ஸில் ஏறினார். என்ன அசதியில் லஷ்மி இருந்தாரோ தெரியவில்லை, ஏறியவுடன் ஜன்னல் ஓரம் சீட் கிடைத்ததும் தூங்க ஆரம்பித்துவிட்டார்.
திடீரென தூங்கிவிட்டதால் டிக்கெட்டும் எடுக்கவில்லை. கண்டக்டர் பூமிநாதனும், லஷ்மி டிக்கெட் ஏற்கனவே வாங்கி இருப்பார் என்று நினைத்து விட்டு விட்டார்.
விழித்த லஷ்மி
வழியில் செக்கிங் இன்ஸ்பெக்டர் பஸ்ஸில் ஏறி, எல்லோரிடமும் டிக்கெட் கேட்டு கொண்டே வந்தார். தூங்கி கொண்டிருந்த லஷ்மியை எழுப்பி டிக்கெட் கேட்டதும், அவர் திருதிருவென விழித்ததுடன், டிக்கெட் எடுக்கவில்லை என்று சொன்னார். இதனால் செக்கிங் இன்ஸ்பெக்டர், பயணி லஷ்மிக்கு டிக்கெட் வழங்காத காரணத்திற்காக கண்டக்டருக்கு மெமோ தந்துவிட்டார்.
பஸ் ஸ்டேண்ட்
இது கண்டக்டர் பூமிநாதனுக்கு ரொம்ப அவமானமாகி விட்டது. எப்படா, இளையான்குடி பஸ் ஸ்டேண்ட் வரும் என்று காத்து கொண்டே இருந்தார். பஸ் ஸ்டேண்ட் வந்துவிட்டதும், லஷ்மி குழந்தையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். உடனே பின்னாடியே வந்த கண்டக்டர் லஷ்மியை கன்னாபின்னாவென்று பேச ஆரம்பித்துவிட்டார்.
மெமோ தந்துட்டாங்க
"உன்னால தான் எனக்கு மெமோ தந்துட்டாங்க" என்று கோபப்பட்டு திட்டினார். தெரியாமல் நடந்து விட்டதாக லஷ்மி சொல்லியும், கண்டக்டருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் லஷ்மியை விரட்டி விரட்டி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டார். அது பஸ் ஸ்டேண்ட் என்பதால் எல்லோருமே இதனை நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
இணையத்தில் வைரல்
அம்மாவை கண்டக்டர் அடிப்பதை அந்த குழந்தை பயந்தபடியே பார்த்து கொண்டு நின்றது. இந்த காட்சியை அங்கிருந்த ஒரு பயணி செல்போனில் வீடியோ எடுத்து அதை இணையத்திலும் போட்டுவிட, அது இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.