எதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்
Recommended Video
சிவகாசி: எங்கள் வண்டி சென்னையில் ஏறினால் டெல்லி செங்கோட்டையில் தான் சென்று முடியும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு 2670 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அதிமுக வெற்றி பெறுகிற கட்சி. நாங்கள் எகஸ்பிரஸ் ரயில் எங்க ரயிலில் ரிசர்வேஷன் செய்து பஸ்ட் கிளாசில் உள்ளது.
இதில், பயணம் செய்ய வருபவர்கள் ஏறி பயணம் செய்யலாம். எங்கள் வண்டி சென்னையில் ஏறினால் டெல்லி செங்கோட்டையில் தான் சென்று முடியும்.
அதை விட்டுவிட்டு செகண்ட் கிளாஸ் அல்லது எஞ்சின் இல்லாத வண்டியில் ஏறினால், முட்டி மோதிக் கொண்டு பயணம் செய்ய முடியாது. ஆகையால் எங்கள் வண்டியில் ஏறி பயணம் செய்து சென்னையில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு செல்லுங்கள். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.