சிவகாசி ஜவுளிக்கடையில் தீ விபத்து - பல லட்சம் ஜவுளிகள் எரிந்து சாம்பல்
சிவகாசி: சிவகாசியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சாம்பலானது.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த ஜவுளிக்கடையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
தீ கொளுந்து விட்டு எரிந்ததால் கடைக்குள் இருந்த ஜவுளிகள் எரிந்து சாம்பலானது. தீ பரவும் முன்னதாகவே ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்த ஜவுளிக்கடை அருகே நகைக்கடை அருகே நகைக்கடை, ஜவுளிக்கடைகள் வரிசையாக இருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.