பட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்
Recommended Video
சிவகாசி: தமிழக பட்ஜெட் ஏட்டுச் சுரக்காய் அல்ல.. கூட்டுச் சுரக்காய் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகாசி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: கமலஹாசனின் அரசியல் அஸ்தமித்து விட்டது. அங்கே கூட்டணிக்கே ஆள் இல்லை. கமலஹாசனின் பொதுக் குழுவில் 15 பேர் மட்டுமே உள்ளனர்.
தேர்தல் என்று வந்தால் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தான் பிரதான கட்சிகள். அவற்றை தவிர வேறு கட்சிகள் இங்கு இல்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு மட்டுமே கொடுத்துள்ளார்.
வேறு எந்த முடிவில் இதில் எடுக்கப்படவில்லை.இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் முடிவு எடுப்பார்கள்.
தமிழக பட்ஜெட் குறித்து இது ஏட்டுச் சுரக்காய் தான் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் இந்த பட்ஜெட் ஏட்டுச் சுரக்காய் அல்ல கூட்டுச் சுரக்காய்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பட்டாசு தொழில் குறித்த வழக்கை அடுத்த வாரம் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. விரைவில் சாதகமான தீர்ப்பு வரும். அதற்காக தமிழக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டாசு தொழிலுக்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு என்று தனியாக தீர்மானம் கொண்டு வர தேவையில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை பெற்று தருவார் என்று கூறினார்.