மும்பை: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்சி வென்றது. இதன் மூலம் சென்னையின் எப்சியின் தொடர் வெற்றிக்கு பிரேக் போட்டது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி., அணி உள்பட 10 அணிகள் இந்தாண்டு பங்கேற்கின்றன.