தொடக்க வீரர்கள் அபாரம்
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரஹானே, தவான், கோஹ்லி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.
ரஹானே சதம்
ரஹானே 104 பந்துகளில் 103 ரன்களைக் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களும் அடங்கும். 43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்களைக் குவித்தது. 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்து களமிறங்கியது.
205 ரன்கள்தான்..
மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் ஹோப் 81 ரன்களை எடுத்தார். இருந்தபோதும் 43 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களே எடுக்க முடிந்தது.
105 ரன்களில் வெற்றி
இதனால் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இந்திய அணியின் புவனேஷ்குமார் 5 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை அள்ளினார்.
குவல்தீப்
அதேபோல் குவல்தீப் யாதவ் 9 ஓவர்கள் வீசி 50 ரன்களைக் கொண்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.