ஹைதராபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
ஆஸ்திலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதனையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், விளையாடிய ஆஸ்திரலிய அணி தோல்வியடைந்தது. கவுகாத்தியில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக பிட்ச் ஈரப்பதத்தோடு இருந்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டது.
எனவே 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமநிலை அடைந்தது.