யுத்தமே நடத்திய பாக்.
இந்தியாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதைப் போலவே பாகிஸ்தான் வீரர்கள் வெறித்தனமாக விளையாடினர். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்த ஆக்ரோஷத்தை காண முடிந்தது.
ஜீரணிக்க முடியாத தோல்வி
ஆனால் கடைசியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவி அதிர்ச்சி வைத்தியம் தந்தது. இந்தியாவின் தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ரசிகர்கள் கொந்தளிப்பு
ரசிகர்கள் நாடு முழுவதும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். பல இடங்களில் கோஹ்லி, டோணி கொடும்பாவிகளும் கூட எரிக்கப்பட்டுள்ளன.
வங்கதேச ரசிகர் தற்கொலை
இந்தியாவின் தோல்வியை நமது நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல பிற நாட்டு ரசிகர்களும் கூட ஜீரணிக்க முடியவில்லை. வங்கதேசத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ஓடும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
ரயில் முன்பாய்ந்து
வங்கதேசத்தின் ஜமல்பூர் பகுதியைச் சேர்ந்த பித்யூத் என்கிற 25 வயது இளைஞர் இந்தியா தோற்றதை தாங்க முடியாமல் நேற்று இரவு ஓடும் ரயில் முன்பாய்ந்து மாண்டு போயுள்ளார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.