அது மேட்டர் இல்லை பாஸ்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கோஹ்லி பேசுகையில் அரை இறுதியில் நாம் யாருடன் மோதுகிறோம் என்பது மேட்டரே இல்லை. சுற்றுப் போட்டிகள் கடுமையானவை. இறுதிப் போட்டிக்குப் போக நமக்கு இன்னும் ஒரு வெற்றி தேவை.
இந்தியா - இங்கிலாந்து ஓகே
எல்லோரும் இந்தியா, இங்கிலாந்து அணிகளை இறுதிப் போட்டியில் காண விரும்புகின்றன. இரு அணிகளும் சிறப்பாக விளையாடினால் இது சாத்தியமாகும்.
யார் வந்தாலும் சரிதான்
இறுதிப் போட்டியில் யார் வேண்டுமானாலும் மோதலாம். இறுதிப் போட்டியில் நாங்கள் இடம் பெற்றால் மகிழ்ச்சியே. நாங்கள் போகுமிடமெல்லாம் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு தருகிறார்கள். இது மகிழ்ச்சி தருகிறது என்றார் கோஹ்லி.
இந்திய தூதரகம் விருந்து
முன்னதாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்திய அணிக்கு விருந்தும், வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதில் ஒட்டுமொத்த இந்திய அணியினரும் கலந்து கொண்டனர். முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மான்டி பனீசர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்