பாகிஸ்தானுக்கு டிமாண்ட்
பெட்டிங் தரகர்கள் இந்தியாதான் வெற்றி பெறும் என கருதுகிறார்கள். எனவே இந்தியா வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு ரூ.147தான் பரிசு தொகையாக கிடைக்குமாம். அதுவே, பாகிஸ்தான் வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு, 300 ரூபாய் பரிசாக கொடுக்கப்படுமாம்.
சூதாட்ட தரகர்கள்
எனவே பெரும்பாலானோர் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என பெட் கட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு அதிகம் பேர் பெட் கட்டினால், இந்தியாவை வெற்றிபெறச் செய்ய சூதாட்ட தரகர்கள் கோல்மால்கள் செய்ய முயற்சிப்பர். இந்தியா மீது அதிகம் பேர் பெட் கட்டினால், பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்ய தங்கள் தந்திரங்களை பயன்படுத்துவர். அப்படி செய்வதுதான் தரகர்களுக்கு லாபம் என்பது காரணம்.
கண்காணிப்பு
சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். நாடு முழுக்க பெட்டிங்கை தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனனர்.
அமிர் சொகைல்
இந்தியா விளையாடும் போட்டிகள் மீது ஓராண்டுக்கு கட்டப்படும் சூதாட்டத் தொகை அளவு 2 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என ஒரு கணக்கீடு கூறுவது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதினால்தான் ஐசிசி, பிசிசிஐ மட்டுமின்றி சூதாட்ட தரகர்களும் பணத்தை அள்ள முடியும். பாகிஸ்தான் எப்படியோ பைனலுக்குள் வர சூதாட்டம்தான் காரணம் என அந்த நாட்டு முன்னாள் வீரர் அமிர் சொகைல் நேற்று கூறியிருந்தார்.