ரஹ்மானின் நம்பிக்கை
இந்த நிலையில்தான் ஆப் கட்டுகளை வீசி இந்தியாவை நிலை குலைய வைக்கப் போவதாக மார் தட்டியுள்ளார் ரஹ்மான். இங்கிலாந்தில் அது தனக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் கூட இந்தியாவுக்கு எதிராக அதை பெரிய அளவில் பயன்படுத்தப் போவதாக அவர் கூறுகிறார்.
2 வருடத்திற்கு முன்பு
2 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆப் கட் மூலம்தான் இந்தியாவை நிலை குலைய வைத்தார் ரஹ்மான். அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங்கை தவிடு பொடியாக்கி அதிர வைத்தார். இரு போட்டிகளிலும் தலா 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்.
இப்பவும் அதே பாச்சா பலிக்குமா
இப்போது மீண்டும் அதே உத்தியைப் பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்த ரஹ்மான் திட்டமிட்டுள்ளார். ஆனால் நடக்குமா என்பதுதான் தெரியவில்லை. இருப்பினும் ரஹ்மான் நம்பிக்கை தெரிவிக்கிறார். இங்கிலாந்தில் இதுவரை எனக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவிடம் எனது வித்தை செல்லுபடியாகும் என்கிறார்.
வங்கதேசத்தில் பெரும் காத்திருப்பு
இதற்கிடையே, வங்கதேச ரசிகர்கள் பெரும் ஆவலுடன் 15ம் தேதி நடைபெறப் போகும் அரை இறுதிப் போட்டிக்காக காத்துள்ளனர். வங்கதேசம் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருகிறதாம். வங்கதேச அணி வலுவான நியூசிலாந்து அணியை சுற்றுப் போட்டியில் வீழ்த்தி அசத்தியது என்பது நினைவிருக்கலாம்.