கேப்டன் டோணி பராக்
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணியை மீண்டும் சேர்க்கவும், கேப்டனாக்கவும் அணி நிர்வாகம் ஆர்வத்துடன் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தவர் டோணி. சாம்பியன்ஸ் லீக் டிராபியையும் வென்று கொடுத்தவர்.
டோணி வருவார்
டோணி நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறுவார் என அணி நி்ர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ஸ்டீபன் பிளமிங்கையே நியமிக்கவும் அது விரும்புகிறது.
புனே ஒப்பந்தம் முடிந்ததும்
புனே அணியுடன் டோணி போட்டுள்ள ஒப்பந்தம் இந்த ஆண்டு கடைசியில்தான் முடிகிறதாம். எனவே அதுவரை அதிகாரப்பூர்வமாக டோணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பேச முடியாது. இருப்பினும் சாதாரண முறையில் அவருடன் விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேசவுள்ளதாம்.
அதே குரூப் அப்படியே திரும்பி வரும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ராஜாக்கள் எல்லாம் மீண்டும் அப்படியே திரும்பி வருவார்கள் என்ற அந்த அணி உத்தரவாதம் கொடுத்துள்ளது. அதன் படி பார்த்தால் டோணி, பிராவோ, அஸ்வின் உள்ளிட்ட அத்தனை பேரும் மீண்டும் சிந்தாமல் சிதறாமல் திரும்பி வருவார்கள் என நம்பலாம்.