இலங்கை வீரர்கள் குற்றச்சாட்டு
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த புகை பிரச்சனை பெரிய அளவில் வைரல் ஆனது. வீரர்கள் வாந்தி எடுப்பதும், மாஸ்க் மாட்டி சுற்றுவதும் டிரெண்ட் ஆனது.
சர்ச்சை
இந்த நிலையில் தற்போது டெல்லி புகை மீது பலர் குற்றம்சாட்டி உள்ளனர். இனி குளிர்காலத்தில் டெல்லியில் விளையாட்டு போட்டிகள் நடத்த கூடாது என்று கோரிக்கை எழும்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது. பள்ளிகளுக்கே விடுமுறை இருக்கும் போது யார் அனுமதியோடு கிரிக்கெட் நடத்தினீர்கள் என்று கேட்டது. மேலும் மருத்துவர்கள் சில வீரர்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.
போட்டிகள் நடக்காது
இந்த நிலையில் தற்போது டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காது என்று கூறப்படுகிறது. ஐசிசி போட்டிகள் எதுவும் 2020 வரை அங்கு நடத்தப்படாது என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதே சமயம் இந்த முடிவு புகை காரணமாக எடுக்கப்படவில்லை, மற்ற மைதானத்தில் விளையாட்டு நடக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நோ ஐபிஎல் போட்டி
தற்போது டெல்லியில் இனி ஐபிஎல் போட்டியும் நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தொடங்க இருக்கும் ஐபிஎல்லில் டெல்லியில் எந்த போட்டியும் நடந்தப்படாது. மேலும் டெல்லி அணி விளையாடும் போட்டிகள் அனைத்து போட்டிகளும் உத்தர பிரதேசத்திற்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.