சிஎஸ்கே தடை
2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை அணியுடன் சேர்ந்து தடை வாங்கியது. இதையடுத்து இந்த இரண்டு அணிகளின் இழப்பை ஈடுகட்டும் வகையில் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் லைனஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றன. புனே அணிக்கு முதல் தொடரில் மட்டும் டோணி கேப்டனாக இருந்தார்.
தடை இல்லை
இந்த நிலையில் சிஎஸ்க்கே , ராஜஸ்தான் அணி மீதான தடை காலம் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் 2018 ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கடந்த ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை அணிக்காக மீண்டும் டோணி விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்தது.
உறுதி
தற்போது சென்னை அணிக்காக டோனி விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. மேலும் டோணிக்கு குறைந்தபட்சம் 80 கோடி வரை கொடுக்கபடும் என்று கூறப்படுகிறது. அவருடன் இன்னும் இருவர் அணியில் சேர வாய்ப்புள்ளது. ஆகவே சென்னை அணிக்காக ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், ஆகிய மூவரில் இன்னும் இருவர் அணிக்கு திரும்புவார்.