அதிரடியாக ஆடிய டோணி
கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் டோணி எப்போது ஓய்வு பெறுவார் என்று பலரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இதனால் அவர் மீது பெரிய அழுத்தம் இருந்தது. இந்த அழுத்தத்துடன் விளையாடிய டோணி மிகவும் அதிரடி காட்டினார். இந்தியாவில் மொத்தம் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். ஆனாலும் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணியின் ஸ்கோரில் பாதி ஆகும்.
புதிய சாதனை
இந்த போட்டியில் 65 ரன்கள் எடுத்ததன் மூலம் டோணி புதிய சாதனை படைத்து இருக்கிறார். அதன்படி இவர் 16,000 ரன்களை கடந்து இருக்கிறார். இந்திய அணியில் 16,000 ரன்களை கடக்கும் 6 வது வீரர் டோணி ஆவார். ஏற்கனவே சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். கோஹ்லி சில நாட்களுக்கு முன் இந்த மைல் கல்லை எட்டினார்.
|
இரண்டாவது கீப்பர்
அதுபோல் இவர் இந்த போட்டியில் 16,000 ரன்களை அடைந்ததன் மூலம் இன்னொரு சாதனையையும் செய்துள்ளார். இவர்தான் கிரிக்கெட் உலகில் 16,000 ரன்கள் எடுத்த இரண்டாவது விக்கெட் கீப்பர். இதற்கு முன்பு இதே சாதனையை இலங்கையின் குமார் சங்கரகரா செய்துள்ளார். மேலும் இது டோணியின் 67வது அரைசதம் ஆகும்.
சாதனை படைத்த இந்தியா
இந்த போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடியது. ஆனால் அதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
1983ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 17 ரன்கள் எடுத்து இருந்த போது 5 வது விக்கெட்டை இழந்தது. 5 விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகத்தான் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் இந்திய அணி தனது மோசமான சாதனையை முறியடித்துள்ளது.