டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி பைனல் போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே நடுவே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பைனல் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மோசமாக தோற்றது. இப்போட்டியில் டாஸ் போடப்படும் முன்பாக அனில்கும்ப்ளேயிடம், கேப்டன் கோஹ்லி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தற்போது சில தகவல்கள் வெளியகியுள்ளன.
பல வாரங்களாகவே அனைத்து ஊடகங்களும் கோஹ்லி-கும்ப்ளே மோதல் குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று கும்ப்ளே அறிக்கையொன்றின் மூலம் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதை அறிவித்தார்.
இந்த நிலையில், டாஸ் வீசப்படும் முன்பாக கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் மோதல் ஏற்பட்டது அம்பலமாகியுள்ளது.