லண்டன்: பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கேட்ட சீண்டல் கேள்வியால் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி கோபமடைந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நேற்று 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணியிடம் மோசமாக தோற்றது. இதன்பிறகு நிருபர்களை சந்தித்தார் கோஹ்லி.
அப்போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கோஹ்லியை கோபமூட்டி பார்க்கும் நோக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, இந்த போட்டியில் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்தார் கோஹ்லி. நோபாலில் விக்கெட் விழுந்தால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். பும்ரா பந்தில் பகர் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோபால் என அறிவிக்கப்பட்டது. இதைத்தான் கோஹ்லி குறிப்பிட்டார்.