ஜூலை 2ல் மோதல்
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஜூலை 2ம் தேதி தங்களது லீக் போட்டியில் மோதவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
தோல்வியே அறியாத இந்தியா
இந்தியா இதுவரை ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை. அந்த வரலாற்றை உலகக் கோப்பையிலும் அது தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செம டீம்
இந்திய அணி படு ஸ்டிராங்காக உள்ளது. கேப்டன் மித்தாலி ராஜ் ஒரு சாதனையாளர். அந்தப் பக்கம் அபாரமான பந்து வீச்சாளராக அனுபவம் வாய்ந்த ஜூலன் கோஸ்வாமி உள்ளார்.
சூப்பர் ஜூலன்
ஜூலன் கோஸ்வாமிதான் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையாளர். அவரது வேகப் பந்து வீச்சு நமது அணிக்கு மிகப் பெரிய பலமாகும்.
திறமைக் குவியல்
இவர்கள் தவிர அதிரடி நாயகி ஹர்மன்ப்ரீத் கவுர், ஏக்தா பிஷ்த், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, மோனா என திறமையாளர்கள் இந்திய அணியில் குவிந்துள்ளனர்.
கடும் போட்டி தரும் பாகிஸ்தான்
அதேசமயம், பாகிஸ்தான் அணியும் சாமானியமானதாக இல்லை கேப்டன் சனா மிர் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர். பாகிஸ்தான் அணியை சமீப காலமாக திறமையாக வழி நடத்தி வருகிறார்.
துருப்புச் சீட்டு பிஸ்மா
கேப்டன் சனாவின் துருப்புச் சீட்டு பிஸ்மா மஹரூப். அபாரமான ஆல்ரவுண்டர். வார்ம் அப் போட்டியில் தனது பேட்டிங் திறமையை முழுமையாக காட்டி பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். இவர்கள் தவிர நயின் அபிதி திறமையான பேட்ஸ்வுமன். அவரும் பாகிஸ்தான் அணிக்கு வலுவான நம்பிக்கையாக உள்ளார்.
மொத்தத்தில் ஆண்கள் போட்டிக்கு சமமான அனலை இந்தப் போட்டியிலும் நிச்சயம் பார்க்கலாம் என்று நம்பலாம்.