தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை
தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை, தூரத்து மாமா பொண்ணுக்கு கல்யாணம் என்று லீவு கூட போட முடியாததால், வயிற்று வலி என்று சொல்லலாமா என்று யோசித்து வருகின்றனர்.
நடந்ததுதான் எல்லோருக்குமே தெரியுமே
இந்த டி-20 போட்டிக்கான அணியை, ஆகஸ்ட் 15ம் தேதியே இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது. அதன்பிறகு நடந்ததுதான் எல்லோருக்குமே தெரியுமே. தற்போது, புதிய அணியை அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட முந்தைய அணியில், 7 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
8 பேர் மட்டும் லீவு சொல்லலை
கேப்டன் உபுல் தரங்கா, மிலிந்தா சிரிவர்தனா, திசாரா பெரீரா, ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெல்லா, வானிந்து ஹசாரங்கா, அகில தனஞ்செயா ஆகிய, 8 பேர் மட்டுமே இதுவரை லீவு சொல்லாதவர்கள். புதிதாக, ஏழு பேர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி 20 தப்பிச்சிருமோ
இந்தாண்டில், டி-20 போட்டிகளில் இலங்கை அணிக்கு வெற்றிகரமாகவே அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான, தலா 3 போட்டிகள் கொண்ட தொடர்களை இலங்கை வென்றது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டித் தொடரை 1-1 என டிரா செய்தது. தற்போது இந்தியாவுடன் விளையாட உள்ளது.