270 ரன்கள் பிந்திய இலங்கை
அந்த அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 270 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 3-0 எனத் தொடரை வெல்வது ஏறக்குறைய உறுதியானது. இலங்கை அணி சொந்த மண்ணில் பரிதாப தோல்வியடைந்தது.
கடைசி விக்கெட்
கடைசி விக்கெட்டுக்காக இன்றைய நாளின் இரண்டாம் பகுதி நீட்டிக்கப்பட்டது. கடைசியில் குமாராவின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வியை அடைந்துள்ளது.
ஒயிட் வாஷ் தோல்வி
முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் வென்று இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கியுள்ளது. வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் எதிரணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கிய முதல் இந்திய அணி என்ற பெருமை விராட் கோஹ்லி நிகழ்த்தியுள்ளார்.
85 ஆண்டுகால வரலாறு
85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும் 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை. இதனை தற்போதைய விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.