இன்று மோதல்
இன்று 3-ஆவது ஆட்டமாக பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மாலை 3 மணிக்கு டெர்பி நகரில் உள்ள கவுன்ட்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
ஒரு முறை கூட வெற்றி இல்லை
இதுவரை நடைபெற்ற உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. இந்த வரலாற்றை வைத்து இந்தியா, பாகிஸ்தான் அணியை எடை போடக் கூடாது.
நல்ல பந்து வீச்சாளர்
பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக உள்ள சானா மிர், நல்ல பந்து வீச்சாளரும் கூட.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் உலக பந்து வீச்சாளர்கள் இவர் 6-ஆவது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2010 மற்றும் 2014-இல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இரு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
முதல் 20 இடங்களில்...
கடந்த 9 ஆண்டுகளாக ஐசிசி தரவரிசை பட்டியிலில் முதல் 20 இடங்களில் உள்ளார் சானா மிர். மகளிர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தானிய பெண் என்ற பெருமைக்குரியவர்.
தீவிரமாக விளையாட வேண்டும்
எனவே இதுவரை பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆடி வெற்றி கண்டதில்லை என்ற பழைய வரலாற்றை வைத்து ஆடினால் அம்போதான். சானா மிர்ரின் சாதனைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விளையாடினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.