28 ஓவர் வரை வங்கதேசம் அசத்தல்
தனது பேட்டிங்கின்போது 28 ஓவர்கள் வரையிலும் வங்கதேசம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அதன் பிறகுதான் கேதார் ஜாதவ் மூலமாக இந்தியாவுக்குப் பெரிய பிரேக் கிடைத்தது.
சூதாட்டம் மாதிரி
வங்கதேச வீரர்கள் அப்போது அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஜாதவை கொண்டு வருவது என்பது கிட்டத்தட்ட சூதாட்டம் போலத்தான். இருந்தாலும் துணிந்து அந்த முடிவை எடுத்தார் கோஹ்லி.
செம பலன்
ஆனால் நினைத்ததை விடவும் சிறப்பான பலனைக் கொடுத்தது கோஹ்லியின் முடிவு. வங்கதேசத்தின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. ஜாதவ் வீசிய ஸ்லோ பால்களை அடிக்க முடியாமல் திணறி ஆட்டமிழந்தனர் வங்கதேச வீரர்கள்.
டோணிதான் காரணம்
உண்மையில் கோஹ்லிக்கு, ஜாதவை இறக்கும் ஐடியாவைக் கொடுத்ததே டோணிதானாம். இதை கோஹ்லியே போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டோணியும், தானும் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறினார் கோஹ்லி.
டோணிக்கும் பங்குண்டு
இதுகுறித்து கோஹ்லி கூறுகையில் ஜாதவை கொண்டு வரும் முடிவுக்கு நான் மட்டும் காரணமல்ல, டோணியும்தான். ஜாதவை இறக்கலாம் என்ற முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்தோம். உண்மையில் ஜாதவும் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு நன்றி என்றார் கோஹ்லி.