|
6 பவுலர்களாம் 200 ரன்னாம்
டோணி இந்த தோல்விக்கு காரணம் இல்லை. 6 பவுலர்களுடன் விளையாடும் முடிவை எடுத்தபோதும், சுமார் 200 ரன்களை அள்ளிக்கொடுத்துள்ளீர்கள். அப்போதே நீங்கள் பின்னடைவை சந்தித்துவிட்டீர்கள். பிளாட்பார்ம் சரியாக இருந்தால்தானே அடித்து ஆட முடியும்.
|
இப்படியா லாஜிக்?
ரோகித் ஷர்மா 5(6) ஹர்திக் பாண்ட்யா 1(2). ஆனால், டோணிக்கு எதிரானவர்கள் டோணி 49(37) ரன்கள் எடுத்தபோதிலும் தோல்விக்கு அவரை பொறுப்பாக்குகிறார்கள். லாஜிக் இல்லை.
|
எல்லோரும் சேர்ந்தே அவ்வளவு அடிக்கவில்லை
ரோகித் + தவான் + ஸ்ரேயாஷ் ஐயர் + ஹர்திக் பாண்ட்யா + அக்சர் பட்டேல் = 35(36) டோணி = 49(37). இப்படி ஒரு புள்ளி விவரத்தை போட்டு டோணி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் இவர்.
|
சுயநலம் இல்லை
டோணி மட்டும் சுயநலவாதி என்றால் அவர் அரை சதம் கடந்திருப்பார். ஆனால் அடித்தாட நினைத்து அவுட் ஆகியிருக்க மாட்டார். இவ்வாறு சொல்கிறது இந்த டிவிட். 49 ரன்களில் சிங்கிள் ஓட வாய்ப்பு கிடைத்தும், டோணி ஓடாமல் அடித்து ஆடுவதற்காக புவனேஸ்வர்குமாரை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் அடுத்த பந்தில் டோணி அவுட்டானது குறிப்பிடத்தக்கது.