வாயில் பிளாஸ்திரி
கோச் யாராக இருந்தாலும் சரி முதலில் அவர்களுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவே வாயை மூடிக் கொண்டு பேசவும் என்பதுதான் என்று சொல்கிறார்கள். குறிப்பாக ஷேவாக் வந்தால் நிச்சயம் அவருக்கு வாய்க் கட்டுப் போட்டு விட்டுத்தான் வேலையில் சேரவே அனுமதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
பட்டுன்னு பேசப்படாது
ஷேவாக் படபடவென்று மனதில் பட்டதை தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விடக் கூடியவர். எனவே இவர் எப்படி கோஹ்லியுடன் செட்டாவார் என்பதுதான் பலரது கவலையாக உள்ளது.
தேவையில்லாத பேச்சுக்கள் கூடாது
மேலும் கேப்டன் மற்றும் வீரர்களை எரிச்சலுக்குள்ளாக்கும்படியான தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்குமாறும் பயிற்சியாளராக வருபவருக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாம். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பட்டியல் போட்டு புதிய தலைமைப் பயிற்சியாளர் கையில் கொடுக்கவுள்ளனராம்.
சிக்கப் போவது யாரோ?
உண்மையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் - கேப்டன் உறவு என்பது மாமியார், மருமகள் உறவு மாதிரிதான் ஆகி விட்டது சமீப காலமாக. கேப்டன் மாமியாரிடம் சிக்கப் போகும் மருமகள் யார் என்பதுதான் அனைவரின் கவலையாகவும் உள்ளது.