லண்டன்: இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். உத்தர பிரதேசத்தில், சில ரசிகர்கள் டிவிகளை போட்டு உடைத்துள்ளனர்.
மறுபக்கம் பாகிஸ்தான் டிரெஸ்சிங் ரூமில், காணாததை கண்டதை போல கொண்டாட்டம் அலைமோதுகிறது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்துள்ளனர்.
THIS SAYS ENOUGH ❤
— Walid Khan (@Iamwalidkhaan) June 19, 2017
LET ALL THE NEGATIVES WASH AWAY ❤#INDvPAK #PAKvIND #CT17Final #ct17 pic.twitter.com/r5EODnMLtW
என்னதான் கேம் ஸ்ப்ரிட் என்றாலும், இதை பார்க்கும்போது சாமானிய இந்திய ரசிகர்களுக்கு கடுப்பாகத்தானே செய்யும். சீரியசாக விளையாடாமல் ஃபிரெண்ட்லி போட்டி போல விளையாடியதுதான் தோல்விக்கு காரணமா என சாமானிய ரசிகர்கள் இதை பார்த்து கேள்வி எழுப்பத்தானே செய்வார்கள்.