ஹைதராபாத்: ஐபிஎல் கிரிட்கெட் தொடர் தனது 10வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக பிரத்யேகமாக டாஸ் காயின் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு அணியில் பல்வேறு நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடி வருகின்றன. தற்போது 10-வது ஐபிஎல் போட்டி துவங்கியுள்ளது. இதில் 8 அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்த வருடம் 8 அணிகளுமே தங்களது சொந்த ஊரில் துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்திய பிறகு, போட்டி தொடங்கும். இதன்படி நேற்று ஹைதராபாத்தில் துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் பெங்களூரு, ஹைதராபாத் அணிகள் மோதின.
முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தனது பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை குறிக்கும் விதமாக முதல் லீக் போட்டியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆரஞ்ச் நிற டாஸ் காயின் பயன்படுத்தப்பட்டது. அதில் 10வது ஐபிஎல் தொடரை குறிக்கும் விதமாக எழுத்துக்கள் இடம் பெற்றிருந்தது.
The toss coin to commemorate 10th edition of #IPL #SRHvRCB pic.twitter.com/ZRxsDNv2o6
— IndianPremierLeague (@IPL) April 5, 2017