டெல்லி: இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சொந்தக் காரணங்களுக்காக புவனேஷ்வர் குமார், ஷிகார் தவான் இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே கோல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டம், நாக்பூரில், வரும், 24ம் தேதி துவங்குகிறது.