For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8000 ரன்களை வேகமாகக் கடந்த வீரர் விராட் கோஹ்லி!

By Shankar

லண்டன்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 8000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நேற்று படைத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.

சாம்பியன்ஸ் கோப்படை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்க தேசத்தை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோற்கடித்தது.

Virat Kohli, the first player scores 8k runs in just 175 innings

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ரன்களை எடுத்த கேப்டன் கோஹ்லி 8 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 88 ரன்களை சேர்த்த போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களைக் கடந்தார். தனது 175-வது இன்னிங்சில் இந்த 8000 ரன்களைக் கடந்ததன் மூலம், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கைத் தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார்.

இந்திய தரப்பில் சௌரவ் கங்குலி 200 இன்னிங்சிலும், சச்சின் டெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், டோணி 241 இன்னிங்சிலும் 8 ஆயிரம் ரன்களைக் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதான விராட் கோஹ்லி இதுவரை 27 சதங்கள், 42 அரை சதங்கள் உட்பட 8,008 ரன்கள் சேர்த்துள்ளார்.

Story first published: Friday, June 16, 2017, 7:38 [IST]
Other articles published on Jun 16, 2017
English summary
Indian Cricket Team Captain Virat kohli becomes the first cricketer who scored 8000 plus runs in just 175 innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X