பெங்களூரு: இபிஎல் கால்பந்து தொடரின் 15வது வாரத்தில், மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக கோல் மழை பொழிந்து லீசெஸ்டர் சிட்டி அணி பார்முக்குத் திரும்பியது.
மொத்தம் உள்ள 10 போட்டிகளில் முதல் நாளில் 6 போட்டிகள் நடந்தன. இதில் நடப்புச் சாம்பியன் லீசெஸ்டர் சிட்டி பார்முக்குத் திரும்பியதுதான் முக்கியமாக இருந்தது. மான்செஸ்டர் சிட்டியை 4-2 என்ற கோல் கணக்கில் லீசெஸ்டர் சிட்டி வீழ்த்தியது. இதில் ஜேமி வார்டி ஹாட்ரிக் கோலடித்தார்.
இன்னொரு முக்கியப் போட்டியில் ஆர்சனல் அணி ஸக்டோக் சிட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
15வது வார போட்டி முடிவுகள்
டிசம்பர் 10
வாட் போர்ட் - எவர்டன் (3-2)
ஸ்வான்சீ - சுந்தர்லேன்ட் (3-0)
பர்ன்லி - போர்ன்மெளத் (3-2)
ஆர்சனல் - ஸ்டோக் சிட்டி (3-1)
ஹல் சிட்டி - கிறிஸ்டல் பாலஸ் (3-3)
லீசெஸ்டர் சிட்டி - மான்செஸ்டர் சிட்டி (4-2)
இன்று நடைபெறும் போட்டிகள்
செல்சீ - வெஸ்ட் புரோம்
செளதாம்ப்டன் - மிடில்ஸ்ப்ரோ
மான்செஸ்டர் யுனைட்டெட் - டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்
லிவர்பூல் - வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்