துபாய்: சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் தொடரில் பி.வி. சிந்து தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் வென்றார். அதே நேரத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் தோல்வியடைந்தார்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசியாக சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது.