தட்டுத் தடுமாறும் இந்தியா
முதல் இரண்டு டெஸ்ட்டுகளில் சந்திக்காத அளவில் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் சவாலை சந்தித்துள்ளது இந்தியா. கடுமையாக போராடி வருகிறது.
445 ரன்களைத் துரத்தி
இங்கிலாந்தின் 445 என்ற பெரிய ஸ்கோரை துரத்திக் கொண்டுள்ளது இந்தியா. இன்றுதான் ஆட்டத்தின் கடைசி நாள். எனவே போட்டி விறுவிறுப்பாகியுள்ளது.
கையில் இருப்பது 6 விக்கெட்தான்
தற்போது இந்தியா 4 விக்கெட்களை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. கையில் இருப்பது 6 விக்கெட்கள்தான்.
வெல்வது கஷ்டம்... டிரா ரொம்பக் கஷ்டம்
நிச்சயம் இந்தியாவால் வெற்றி பெற முடியாது. கஷ்டமான காரியம் அது. அபாரமான ஆட்டத்தைக் காட்டினால்தான் உண்டு. அதேசமயம், டிராவுக்கு முயற்சிக்கலாம் என்றால் அதுவும் கூட சிரமமாக மாறியுள்ளது. எனவே இந்தியா பெரும் இக்கட்டில் உள்ளது.
ஆண்டர்சன் - மொயீன் அலி
ஒரு பக்கம் ஜேம்ஸ் ஆண்டர்சன் அச்சுறுத்துகிறார். மறுபுறம் மொயீன் அலியின் பந்து வீச்சும் பயமுறுத்துகிறது. இதைச் சமாளித்து கரையேறுவது மிகவும் கடினம்தான்.
சமாளிப்போம்.. நம்புவோம்
இந்த நிலையில் விராத் கோஹ்லி அளித்துள்ள பேட்டியில், நாம் நமது கேரக்டரை காட்ட வேண்டும். அதுதான் முக்கியம். நிச்சயம் அதை நாம் செய்ய முடியும். தொடரை வெல்ல வேண்டும் என்றால் இதுபோன்ற சவாலையும் நாம் சந்தித்தாக வேண்டும். நிச்சயம் அனைவரும் ஒருங்கிணைந்தால் வெல்லலாம், சாதிக்கலாம்.
பந்து திரும்பும்
கடைசி நாளில் பந்து திரும்பும் வாய்ப்புள்ளது. ஆனால் அவர்களிடம் நம்மைப் போல நல்ல இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை. எனவே நம்பிக்கையுடன் நாம் பந்துகளைச் சந்திக்க வேண்டும். அதேசமயம் மொயீன் அலி இருக்கிறார். அவரைச் சமாளிப்பதுதான் கஷ்டமானது. இருந்தாலும் நாம் போராட வேண்டும்.
முதல்ல நானே சரியில்லை
நானும் கூட இந்தத் தொடரில் சில தவறுகளைச் செய்துள்ளேன். அதேசமயம் எப்போதும் பர்பெக்ட்டாக இருக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது என்றார் கோஹ்லி.