டெல்லி: பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து மொத்தம் 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
சேவாக், பி.டி.உஷா உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. சேலத்தை சேர்ந்த மாரியப்பன் ரியோவில் நடைபெற்ற பாரலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு பத்மஸ்ரீ விருது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.