சென்னை: சென்னையில் நேற்று நடந்த புரோ கபடி லீக் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பட்னா பைரேஸ்ட் அணி, 47-44 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வென்றது. இதன் மூலம், மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. சென்னையில் நாளை நடக்கும் பைனலில் குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியை வென்று ஹாட்ரிக் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டியின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னையில் நேற்று இரவு நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், பட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.