புவனேஸ்வர்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய தடகளம் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதலில் தங்கபதக்கம் வென்றார் .ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது
22-வது ஆசிய தடகளப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 நாடுகளின் 800 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் 95 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
3-வது நாளான இன்று ஆசிய தடகளம் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதலில் தங்கபதக்கம் வென்றார். இவர் பந்தய துாரத்தை 9 நிமிடம், 59.47 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆசிய தடகள போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்க பதக்கம் வென்று முதலிடத்தில் உள்ளது.