துபாய்: துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் நாகர்கோவில் அல் அலி இரண்டாம் இடம் பெற்றார்.
துபாய் சோனாப்பூர் பகுதியில் 3 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் நடந்தது.
துபாயில் நடந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 46 நிமிடங்களில் கடந்து இரண்டாவது இடத்தை தமிழக வீரர் சையது அலி பெற்றார். இந்த போட்டி தங்களுக்கு மன நிறைவை அளித்ததாக போட்டியில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர்.