லக்னோ: புரோ கபடி லீக், சீசன் 5 போட்டிகளில், லக்னோவில் நடந்து வரும் போட்டிகளில், உள்ளூர் அணியான உ.பி., யோத்தா, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.தெலுகு டைட்டன்ஸ் அணியை 25-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
புரோ கபடி லீக் 5வது சீசனில் தற்போது லக்னோவில் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், உள்ளூர் அணியான உ.பி.,யோத்தா அணியும், தெலுகு டைட்டன்ஸ் அணியும் மோதின.